» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கைது செய்யாதது ஏன்? மாணவர் சங்கம் கேள்வி!
வியாழன் 20, நவம்பர் 2025 3:37:25 PM (IST)
விளாத்திகுளம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய மாணவர் சங்கம் மாவட்டத் தலைவர் ச. மாடசாமி, மாவட்டச் செயலாளர் ர. ராம் குமார் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் என்ற ஹென்றி மாணவிக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போக்சோ உட்பட ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தும் இன்று வரை கைது செய்ய முடியவில்லையே ஏன்? இது போலீசாரின் நிர்வாக தோல்வியா? திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான பொற்காலம் என்று மார்தட்டிக் கொள்ளும் சமூக நீதி அரசு தமிழ்நாட்டில் தொடர்ந்து பெண்களுக்கு அரங்கேறும் பாலியல் கொடுமைகளுக்கு தீர்வு காணுமா?
பள்ளிக் கல்வித் துறையே!! மாவட்ட காவல்துறையே!! மாவட்ட நிர்வாகமே!! உடனடியாக இயற்பியல் ஆசிரியர் தியாகராஜனை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகள் புகார் தெரிவித்தும் அலட்சியமாக செயல்பட்டு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியை சீபா ஃபிளவர் லைட்யை துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும், இதுபோன்று பாலியல் பிரச்சனைகளை தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பாக வலியுறுத்துகிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











naan thaanNov 21, 2025 - 05:59:21 PM | Posted IP 162.1*****