» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: போலி தீவிரவாதிகள் பிடிபட்டனர்!
வியாழன் 20, நவம்பர் 2025 11:29:38 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தொடங்கியது. தீவிரவாதிகள் போல வந்த 13 பேர் பிடிபட்டனர்.
தமிழ்நாட்டில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை 8:00 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி ராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பேக்டர் பேச்சிமுத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை பணியில் ஈடுபட்டனர். இதில் மீன்பிடி துறைமுகம், திரேஸ்புரம், பழைய துறைமுகம் பகுதிகளில் தீவிரவாதிகள் போல் ஊடுருவிய 13பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 2 போலி வெடிகுண்டுகள் உட்பட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த ஒத்திகையில் கடலோர பாதுகாப்பு படையினர், கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர், சுங்க இலாகாவினர், மீன்வளத் துறையினர், கியூ பிரிவு போலீசார், சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடல் பகுதியில் கடற்படை கப்பல், கடலோர பாதுகாப்பு படை கப்பல், ரோந்து படகு மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










