» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செல்போன்கள் திருட்டு: 2 வாலிபர்கள் கைது!

வியாழன் 20, நவம்பர் 2025 10:15:44 AM (IST)

கோவில்பட்டியில் செல்போன்களை திருடியதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்தித்தோப்பு ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் அஜய்(20). மதுரையில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி படித்து வரும் இவர், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பயன்படுத்தி வந்தாராம். இவரது உறவினர் மணிகண்டனும், அஜய்யும் சம்பவத்தன்று பைக்கில் மந்தித்தோப்பு - பாண்டவர்மங்கலம் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தனராம். 

அப்போது, அஜய்யின் கைப்பேசி மற்றும் மணிகண்டனின் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசி ஆகிய இரண்டையும் பைக்கின் மீது வைத்துவிட்டு சிறுநீர் கழிக்க சென்றுவிட்டார்களாம். திரும்பி வந்து பார்த்தபோது கைப்பேசிகளை காணவில்லையாம். இதுகுறித்து அஜய் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி கீழபாண்டவர் மங்கலம் நடுத் தெருவைச் சேர்ந்த பரமசிவம் மகன் மதன்குமார்(23) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த காளிராஜ் மகன் அஜித்(22) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory