» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செல்போன்கள் திருட்டு: 2 வாலிபர்கள் கைது!
வியாழன் 20, நவம்பர் 2025 10:15:44 AM (IST)
கோவில்பட்டியில் செல்போன்களை திருடியதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்தித்தோப்பு ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் அஜய்(20). மதுரையில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி படித்து வரும் இவர், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பயன்படுத்தி வந்தாராம். இவரது உறவினர் மணிகண்டனும், அஜய்யும் சம்பவத்தன்று பைக்கில் மந்தித்தோப்பு - பாண்டவர்மங்கலம் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தனராம்.
அப்போது, அஜய்யின் கைப்பேசி மற்றும் மணிகண்டனின் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசி ஆகிய இரண்டையும் பைக்கின் மீது வைத்துவிட்டு சிறுநீர் கழிக்க சென்றுவிட்டார்களாம். திரும்பி வந்து பார்த்தபோது கைப்பேசிகளை காணவில்லையாம். இதுகுறித்து அஜய் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி கீழபாண்டவர் மங்கலம் நடுத் தெருவைச் சேர்ந்த பரமசிவம் மகன் மதன்குமார்(23) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த காளிராஜ் மகன் அஜித்(22) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










