» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் திருட்டு: 2பேர் கைது

வியாழன் 20, நவம்பர் 2025 10:06:57 AM (IST)

உடன்குடியில் ஆடு திருடிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி புதுமனை மேலத்தெருவை சேர்ந்த பொன்ராஜ் மனைவி புஷ்பக்கனி. இவர் வீட்டில் 3 ஆடுகள் வளர்த்து வந்தார். சம்பவத்தன்று காலையில் ஆடுகளை வீட்டுக்கு வெளியே மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்ட அவர், வேலைக்கு சென்றார். மாலையில் திரும்பி வந்த போது 3 ஆடுகளையும் மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. 

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அந்த ஆடுகளை உடன்குடி சாதரக்கோன்விளையை சேர்ந்த சுப்பையா மகன் கந்தன் என்ற மாட்டு கந்தன் (50), துர்க்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜ்குமார் மகன் நாகராஜா (26) ஆகியோர் திருடி சென்றது தெரியவந்தது. உடனடியாக அந்த 2பேரையும் போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory