» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் திருட்டு: 2பேர் கைது
வியாழன் 20, நவம்பர் 2025 10:06:57 AM (IST)
உடன்குடியில் ஆடு திருடிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி புதுமனை மேலத்தெருவை சேர்ந்த பொன்ராஜ் மனைவி புஷ்பக்கனி. இவர் வீட்டில் 3 ஆடுகள் வளர்த்து வந்தார். சம்பவத்தன்று காலையில் ஆடுகளை வீட்டுக்கு வெளியே மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்ட அவர், வேலைக்கு சென்றார். மாலையில் திரும்பி வந்த போது 3 ஆடுகளையும் மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அந்த ஆடுகளை உடன்குடி சாதரக்கோன்விளையை சேர்ந்த சுப்பையா மகன் கந்தன் என்ற மாட்டு கந்தன் (50), துர்க்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜ்குமார் மகன் நாகராஜா (26) ஆகியோர் திருடி சென்றது தெரியவந்தது. உடனடியாக அந்த 2பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










