» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தலித்துகள், பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி சிபிஐ ஆர்ப்பாட்டம்

புதன் 19, நவம்பர் 2025 3:46:11 PM (IST)



தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்திய கம்யூனிட் கட்சி தேசிய நிர்வாகக்குழு தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுத்த நிறுத்த கோரி தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சி.பி.ஐ மாநகரசெயலாளர் மாநகர மன்ற உறுப்பினர் ஜி.தனலெட்சுமி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் டாக்டர் த.அறம் கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளர் பி.கரும்பன், மாவட்ட துணைச் செயலாளர்கள் பாலமுருகன், பாபு, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பி.ஞானசேகர், கோவில்பட்டி நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம், எட்டயபுரம் நகரச்செயலாளர் சோலையப்பன், எட்டயபுரம் தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory