» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலருக்கு விருது : அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்!

புதன் 19, நவம்பர் 2025 3:16:48 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலருக்கு மாநில அளவில் சிறந்த நூலக ஆர்வலருக்கான  விருதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார். 

பொது நூலகத் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய நூலகர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான "டாக்டர்.எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது”, வாசகர் வட்ட தலைவர்களுக்கு "நூலக ஆர்வலர்” விருது,  அதிக உறுப்பினர், புரவலர் மற்றும் நன்கொடை சேர்த்த நூலகங்களுக்கு கேடயம்  வழங்குதல் மற்றும் கட்டடம் கட்டுதல் / பராமரிப்பு பணிகளுக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளருக்கு சிறப்பு விருதுகள் வழங்கும் விழா சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. 

விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருதுகளை வழங்கினார். இவ்விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் சந்திரபோசுக்கு சிறந்த நூலக ஆர்வலருக்கான விருது வழங்கப்பட்டது. இவர் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 34வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இவரது ஏற்பாட்டின் பேரில் தூத்துக்குடி மாநகராட்சி நூலக கட்டிடம் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மக்கள் பங்களிப்புடன் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory