» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மழையில் சரிந்த மின்கம்பம் - போக்குவரத்து தடை!
புதன் 19, நவம்பர் 2025 12:52:52 PM (IST)

தூத்துக்குடியில் பெய்த மழை காரணமாக மேலூர் பங்களா தெருவில் மின் கம்பம் சரிந்ததால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 5 மணி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், நேற்று இரவு பெய்த மழையால் குரூஸ் பர்னாந்து சிலை அருகில், மேலூர் பங்களா தெருவில் பகுதியில் மின் கம்பம் சரிந்தது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் அந்த மின் கம்பத்தை சுற்றிலும் பேரிகார்டுகள் அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர். மேலும் மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்து புதிதாக மின் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










