» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மழையில் சரிந்த மின்கம்பம் - போக்குவரத்து தடை!

புதன் 19, நவம்பர் 2025 12:52:52 PM (IST)



தூத்துக்குடியில் பெய்த மழை காரணமாக மேலூர் பங்களா தெருவில் மின் கம்பம் சரிந்ததால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 5 மணி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், நேற்று இரவு பெய்த மழையால் குரூஸ் பர்னாந்து சிலை அருகில், மேலூர் பங்களா தெருவில் பகுதியில் மின் கம்பம் சரிந்தது. 

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் அந்த மின் கம்பத்தை சுற்றிலும் பேரிகார்டுகள் அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர். மேலும் மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்து புதிதாக மின் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory