» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.13லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை : அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

புதன் 19, நவம்பர் 2025 12:28:43 PM (IST)



தூத்துக்குடியில்  ரூ.13லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். 

தூத்துக்குடியில்  அண்ணாநகா் பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுநிதியிலிருந்து ரூ.13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடையை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் சுப்புராஜ். வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனா் தனலட்சுமி, பொதுவிநியோக திட்ட சாா்பதிவாளர் அந்தோணிபட்டுராஜ், வட்டார வளர்ச்சி அலுவலா் ஐகோட் மகாராஜா, உதவி செயற்பொறியாளர் ரவி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப்,  உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory