» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பீச் ரோட்டில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை : பொதுமக்கள் கோரிக்கை!
புதன் 19, நவம்பர் 2025 12:05:15 PM (IST)

தூத்துக்குடியில் பீச் ரோட்டில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி ரோச் பார்க் துறைமுகம் சாலை துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. அதிகாலை மற்றும் மாலை வேளையில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காகவும், விளையாட்டு பயிற்சிக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் பயிற்சி மருத்துவர்கள் 3பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்கள் அதிகாலை டியூட்டி முடிந்த பின்னர் ரிலாக்ஸ் செய்வதற்காக பீச் ரோட்டில் காரில் சென்றுவிட்டு பின்னர் விடுதிக்கு செல்வது வழக்கம். அதுபோல் இன்று காலை சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணம், அந்த சாலையில் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததாலும் சாலையின் நடுவில் டிவைடர்கள் இல்லாதும் என்று தெரியவந்துள்ளது. இருபுறமும் வாகனங்கள் வரும்போது சாலையின் நடுவில் டிவைடர்கள் இல்லாதால் எதிரே வேகமாக வாகனங்கள் வரும் போது விபத்துக்கள் ஏற்படுகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மற்றும் துறைமுக நிர்வாகம் இணைந்து கடற்ரை சாலையில் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் தொடங்கி தெர்மல் நகர் சந்திப்பு வரை சாலையின் நடுவில் கான்கிரீட் டிவைடர்கள் அமைத்து மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து வாகனத்தை நிறுத்தி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
Samuel jNov 19, 2025 - 03:45:51 PM | Posted IP 162.1*****
இரவு நேரத்தில் மீன்பிடி துறைமுகத்திற்கு வரும் வாகனங்கள் அதிவேகமாக வருகிறது கொஞ்சம் கூட எதிர்த்து வண்டி வருகிறது ஓரத்தில் வண்டி போகிறது என்று பார்க்க மாட்டார்கள் அவர்களே பாதி விபத்துக்கு காரணமாக இருக்கிறார்கள் அவ்வளவும் வெளியூர் வண்டி இதை தயவுசெய்து காவல்துறை கவனிக்கவும்
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











முருகவேல்Nov 19, 2025 - 05:08:27 PM | Posted IP 104.2*****