» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் பீடி இலைகள், பெட்ரோல் பறிமுதல்: 2பேர் கைது!
புதன் 19, நவம்பர் 2025 7:42:36 AM (IST)
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ பீடி இலைகள், 400 லிட்டர் பெட்ரோலை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி கடல் பகுதியில் சுங்கத் துறை கண்காணிப்பாளர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நடுக்கடலில் 3 கடல் மைல் தொலைவில் ஒரு பைபர் படகு, சுங்கத் துறை ரோந்து படகை கண்டவுடன் வேகமாக சென்hம். இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விரட்டிச் சென்று காசுவாரி தீவு அருகே அந்தப் படகை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் சோதனையிட்டதில், அந்தப் படகில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ பீடி இலைகள், 400 லிட்டர் பெட்ரோல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பீடி இலைகள், பெட்ரோல் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட பைபர் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்த சங்கத் துறையினர், கடத்தலில் ஈடுபட்ட திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஜெயபால், சுனாமி காலனியைச் சேர்ந்த ஜெனிஸ்டன் ஆகியோரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










