» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலைகளில் திரிந்த 36 மாடுகள் கோசாலையில் அடைப்பு:‍ மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி!

செவ்வாய் 18, நவம்பர் 2025 4:43:43 PM (IST)



தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக திரிந்த 36 மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாநகரின் முக்கிய சாலைகள் மற்றும் போக்குவரத்து அதிகமுள்ள தெருக்களில் தற்போது கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து தூத்துக்குடி மாநகர சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் விதமாக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேயர் ஜெகன், ஆணையர் பிரியங்கா ஆகியோர் உத்தரவின்படி மாநகர் நல அலுவலர் சரோஜா மேற்பார்வையில் சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் பணியாளர்கள் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை எட்டயபுரம் ரோடு, பாளையங்கோட்டை ரோடு, திருச்செந்தூர் ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் திரிந்த 36 மாடுகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த கால்நடைகளை மாநகராட்சிக்கு சொந்தமான கோ சாலையில் அடைக்கப்பட்டது. இதில் மாடுகளுக்கு 5000 ரூபாயும் கன்னுக்குட்டிகளுக்கு 2500 ரூபாயும் முதல் கட்டமாக மாநகராட்சிக்கு மாட்டின் உரிமையாளர் பணத்தை செலுத்தி மாடுகளை அழைத்துச் செல்ல வேண்டும். இரண்டாவது முறை அதே மாடு பிடிபட்டால் மாட்டுக்கு 10 ஆயிரம் ரூபாயும் கன்னுக்குட்டிக்கு 5000 ரூபாயும் மூன்றாவது முறை அதே மாடு பிடிபட்டால் மாடு மாநகராட்சிக்கு சொந்தம் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆகையால் இனி வரும் காலங்களில் சாலைகளில் மாடுகள் தெரிந்தால் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோசாலையில் அடைக்கப்பட்டுள்ள மாடுகளை மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மாநகராட்சி, மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு மாடுகளுக்கு உரிய நேரத்தில் உணவு வகைகளை நேரத்துக்கு நேரம் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து

ஏரியா காரன்Nov 18, 2025 - 08:56:37 PM | Posted IP 172.7*****

ஏம்பா... சாலையில் ஆடு, மாடு எல்லாம் கண்ணனுக்கு தெரியுது , துட்டுக்காக பறிமுதல் செய்ய தெரியுது, ஆனால் குண்டும் குழியுமான ரோட்டை கண்டால் கண்டுக்க மாட்டாங்க,கண்டுக்காம போவானுங்க ... என்ன மாதிரி ஆளுங்க நீங்க எல்லாம்..??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory