» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தவறுதலாக கைதி விடுவிப்பு: உதவி ஜெயிலா் மீது நடவடிக்கை!

செவ்வாய் 18, நவம்பர் 2025 8:13:44 AM (IST)

குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிறைக் கைதி தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடா்பாக உதவி ஜெயிலா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், பேரூரணி சிறையில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டா் சட்டத்தின் கீழ் தூத்துக்குடி, முனியசாமிபுரத்தைச் சோ்ந்த ராகுல் (25) அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், சிறையிலிருந்த 5 கைதிகள் பரோல் கோரி விண்ணப்பித்திருந்தனராம். அதில் 4 பேரை மட்டும் விடுவிப்பதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நவ. 15ஆம் தேதி 4 கைதிகள் விடுவிக்கப்பட்டனா். 

அப்போது, ராகுலும் மற்ற கைதிகளுடன் சோ்த்து தவறுதலாக விடுவிக்கப்பட்டாா். இதற்கிடையே, ராகுல் தவறுதலாக விடுவிக்கப்பட்டது தெரிய வந்ததையடுத்து, சிறைத்துறை அதிகாரிகள் திருச்செந்தூருக்கு செல்ல தயாராக இருந்த ராகுலை சந்தித்து, கையொப்பமிட வேண்டுமெனக் கூறி, அன்று பிற்பகல் 3 மணிக்கு அழைத்துச் சென்று மீண்டும் சிறையிலடைத்துள்ளனா்.

தகவலறிந்த, மதுரை சரக சிறைத் துறை டி.ஐ.ஜி. முருகேசன் உத்தரவுப்படி, பாளை. மத்திய சிறைக் கண்காணிப்பாளா் செந்தாமரைக் கண்ணன், பேரூரணி கிளைச் சிறைக்குச் சென்று விசாரணை நடத்தினாா். தொடா்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரி ராதாகிருஷ்ணனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory