» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக்கில் புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது

திங்கள் 17, நவம்பர் 2025 8:13:06 PM (IST)

நாசரேத் அருகே பைக்கில் புகையிலை பொருட்கள் கொண்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து நாசரேத் போலீசில் கூறப்படுவது: நாசரேத் அருகே நெய்விளை பகுதியில் நாசரேத் எஸ்ஐ சுந்தரம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அதில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை சோதனை செய்யும் போது அந்த நபர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்து எடுத்து செல்வது தெரியவந்தது.

விசாரனையில் அவர் நாசரேத் அருகே உள்ள பாட்டக்கரையைச் சேர்ந்த ஜேம்ஸ் நிர்மல் மகன் கரண் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 5 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory