» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உப்பளத்தில் ரூ.27லட்சம் மதிப்புள்ள உப்பு திருட்டு : போலீஸ் விசாரணை
திங்கள் 17, நவம்பர் 2025 8:16:19 AM (IST)
ஆறுமுகநேரி உப்பளத்தில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள 900 டன் உப்பை திருடிய 8பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி, விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (55). இவருக்கு, ஆறுமுகநேரி தனியார் ரசாயன ஆலை பின்புறம் 10 ஏக்கரில் உப்பளம் உள்ளது. கடந்த 12-ம் தேதி இவரது உப்பளத்தில் குவித்து வைத்திருந்த உப்பை சிலர் லாரிகளில் ஏற்றி கொண்டிருந்தார்களாம்.
இதை அறிந்த மகேஷ் உப்பளத்திற்கு விரைந்து சென்று, உப்பை திருடி கொண்டிருந்தவர்களை கண்டித்துள்ளார். இதில், ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள் மகேசை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து விட்டு லாரிகளை ஓட்டிச் சென்று விட்டார்களாம். 900 டன் உப்பை திருடி சென்று விட்டதாகவும், இதன் மதிப்பு ரூ.27 லட்சம் என மகேஷ் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.
அவரது புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து, ஆறுமுகநேரிபாரதிநகர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் மகன் ஆனந்த குமார், அவரது தம்பி நாகராஜன் உள்பட 8 பேரை தேடிவருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










