» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி நகராட்சிப் பள்ளியில் ரூ.1.44 கோடியில் புதிய வகுப்பறைகள் திறப்பு

ஞாயிறு 16, நவம்பர் 2025 9:16:38 AM (IST)



கோவில்பட்டியில் பங்களாத் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பங்களாத் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் (ஆங்கிலவழிக் கல்வி) பள்ளி மேம்பாட்டு நிதி - உள்கட்டமைப்பு பணி திட்டத்தின்கீழ் ரூ. 82 லட்சத்தில் தரைதளத்தில் 5, பள்ளி மேம்பாட்டு நிதி - இயக்குதல், பராமரிப்புப் பணி திட்டத்தின்கீழ் ரூ. 62 லட்சத்தில் முதல் தளத்தில் 3 என மொத்தம் 8 புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. விழாவுக்கு, நகர்மன்றத் தலைவர் கா. கருணாநிதி தலைமை வகித்தார். 

சார் ஆட்சியர் {ஹமான்சு மங்கள் முன்னிலை வகித்தார். சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் புதிய வகுப்பறைக் கட்டடம், கல்வெட்டைத் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினார். நகர்மன்ற உறுப்பினர்கள் முத்துலட்சுமி, உலகராணி, ராமர், ஏஞ்சலா, சுரேஷ், தலைமையாசிரியை ராஜசரஸ்வதி, உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அதே தெருவிலும், அரசு கலை-அறிவியல் கல்லூரியிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முகாம்களை அமைச்சர் ஆய்வு செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory