» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி டீ மாஸ்டர் பலி!

சனி 15, நவம்பர் 2025 8:20:06 AM (IST)

கோவில்பட்டியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி டீ மாஸ்டர் உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கும் - இளையரசனேந்தல் சுரங்கப்பாதையின் ரயில்வே தண்டவாளத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் நேற்று முதியவர் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீசாக்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், எட்டயபுரம் வட்டம் , கருப்பூர் என்.சுப்பலாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த வேல் மகன் ரத்தினவேல் (60) என்பதும், சிந்தலக்கரையில் உள்ள ஹோட்டலில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்த இவர், கோவில்பட்டி சீனிவாச நகரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்ல தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory