» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி பள்ளியில் குழந்தைகள் தின விழா

வெள்ளி 14, நவம்பர் 2025 3:15:01 PM (IST)



கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா இன்று மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். உப தலைவர் செல்வராஜ், செயலாளார் ஜெயபாலன் பொருளாளர் சுரேஷ் குமார், பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிச் செயலாளர் அட்வகேட் செல்வம் மற்றும் பள்ளி பொருளாளர் பாஸ்கரன் ஆலோசனையின்படி விழா நடைபெற்றது. 

பள்ளிக்குழு உறுப்பினர்கள், ஆ.செல்வம், செந்தில்குமார், ரவிமாணிக்கம், பள்ளி முதல்வர் பிரபு ஆகியோர் விழாவினை தொடங்கி வைத்தனர். விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மாறுவேடப்போட்டி, பேச்சுப்போட்டி, நடனம் மற்றும் நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவி சுகவர்ணா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை சிவராணி, செல்வவிமலா, மற்றும் ஆசிரியப்பெருமக்களும் அலுவலர்களும் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory