» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டிற்குள் நுழைந்த கொம்பேறி மூக்கன் பாம்பு : தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்!

வெள்ளி 14, நவம்பர் 2025 11:19:56 AM (IST)



தூத்துக்குடியில் இரயில்வே குடியிருப்பில் வீட்டிற்குள் நுழைந்த 3 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். 

தூத்துக்குடி இரயில்வே குடியிருப்பில் பிரம்ம முத்து என்பவரது வீட்டினுள் பாம்பு புகுந்து விட்டது. பாம்பை கண்டதும் வீட்டில் இருந்தவர்கள் பதறி அடித்து வீட்டை விட்டு வெளியே வந்து சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வீட்டினுள் பதுங்கி இருந்த 3 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக மீட்டு வனப் பகுதியில் கொண்டு விட்டனர். இதனால் இரயில்வே குடியிருப்பு வாசிகள் நிம்மதி அடைந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory