» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாட்டுவண்டி மீது மோட்டார் பைக் மோதல்: வாலிபர் பலி

வெள்ளி 14, நவம்பர் 2025 8:33:03 AM (IST)

விளாத்திகுளம் அருகே மாட்டுவண்டி மீது மோட்டார் பைக் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மகன் சங்கர் (24). இவர் தூத்துக்குடி மேலஅரசரடியில் உள்ள ஒரு தனியார் ஆலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் புளியங்குளத்தில் இருந்து மேலஅரசரடியில் உள்ள ஆலையில் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

விளாத்திகுளம்- குளத்தூர் வடக்கு காலனி மின் வாரிய பகுதியில் சென்றபோது மணல் ஏற்றிய மாட்டு வண்டி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்தது. அப்போது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் மாட்டுவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்த தகவலின் பேரில் குளத்தூர் போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு சங்கர் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இ்ச்சம்பவம் குறித்து அந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory