» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாட்டுவண்டி மீது மோட்டார் பைக் மோதல்: வாலிபர் பலி
வெள்ளி 14, நவம்பர் 2025 8:33:03 AM (IST)
விளாத்திகுளம் அருகே மாட்டுவண்டி மீது மோட்டார் பைக் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மகன் சங்கர் (24). இவர் தூத்துக்குடி மேலஅரசரடியில் உள்ள ஒரு தனியார் ஆலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் புளியங்குளத்தில் இருந்து மேலஅரசரடியில் உள்ள ஆலையில் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
விளாத்திகுளம்- குளத்தூர் வடக்கு காலனி மின் வாரிய பகுதியில் சென்றபோது மணல் ஏற்றிய மாட்டு வண்டி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்தது. அப்போது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் மாட்டுவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்த தகவலின் பேரில் குளத்தூர் போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு சங்கர் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இ்ச்சம்பவம் குறித்து அந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










