» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது வேன் மோதியதில் மீன் வியாபாரி பலி

வெள்ளி 14, நவம்பர் 2025 8:11:49 AM (IST)

பேய்க்குளத்தில் பைக் மீது லோடு வேன் மோதிய விபத்தில் மீன் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் பேய்க் குளம் அருகே உள்ள அருளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சா. பொன்னையா (65). மீன் வியாபாரம் செய்து வந்தார். நேற்று இவர், பேய்க்குளத்தில் இருந்து முனைஞ்சிபட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். வலது பக்கமாக இருசக்கர வாகனத்தை அவர் திருப்பியதாக தெரிகிறது. 

அப்போது ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த க. அருள்நாதன் (29) ஓட்டி வந்த லோடு வேன், பொன்னையாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பொன்னையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிந்து லேடு வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory