» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கடலில் மூழ்கிய பக்தர் உயிருடன் மீட்பு

வெள்ளி 14, நவம்பர் 2025 7:53:36 AM (IST)



திருச்செந்தூர் கடலில் மூழ்கிய பக்தரை கடற்கரை பாதுகாப்புப் பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல நேற்று முன்தினம் பிற்பகல் திருச்செந்தூர் வந்திருந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் (40), கோயில் வளாகத்தில் முடிகாணிக்கை செலுத்திவிட்டு கடலில் நீராடி கொண்டிருந்தார். 

அப்போது கடல் அலையில் சிக்கி தத்தளித்து நீரில் மூழ்கினார். இதைக் கண்ட கடற்கரை பாதுகாப்புப் பணியாளர்கள் சிவராஜா, ஆறுமுகநயினார், இசக்கி விக்னேஷ் ஆகியோர் விரைந்து கடலில் குதித்து நீரில் மூழ்கியவரைத் தேடினர். அப்போது அவர் கடலில் மிதந்து கொண்டிருந்தார். உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை மீட்டு கரைக்குக் கொண்டுவந்து முதலுதவி அளித்து சங்கரின் வாய் வழியாக நீர் வெளியேற்றினர். 

சிறிது நேரத்தில் அவர் கண் விழித்தார். அவர் உயிருடன் மீட்கப்பட்டதையடுத்து, முதுலுதவி மையத்தில் அவருக்கு சிகிச்சை அளித்து அவசர ஊர்தியில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கும், அதன் பின்னர், தூத்துக்குடி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பக்தரின் உயிருடன் மீட்ட கடற்கரை பாதுகாப்புப் பணியாளர்களுக்கு பக்தர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory