» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தொடர் கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது : தூத்துக்குடியில் மக்கள் அவதி!

திங்கள் 20, அக்டோபர் 2025 10:02:38 AM (IST)



தூத்துக்குடியில் தொடர் கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி 3வது மைல் அருகே உள்ள திருவிக நகரில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையான இன்று தண்ணீர் முட்டளவு தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்துள்ளனர். இது போல் தபால் தந்தி காலனி, கதிர்வேல் நகர் உள்ளிட்ட மாநகர பகுதியில் தாழ்வான இடங்களில் குளம் போல் மழைநீர் தேங்கியது. மழைவெள்ளம் வடியாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகள் அரிக்கப்பட்டு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். 


மக்கள் கருத்து

ராஜாOct 21, 2025 - 10:46:14 AM | Posted IP 172.7*****

அதிமுக வார்டுகள் அதிகாரிகள் புறக்கணிப்பு செய்றாங்க...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory