» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் டிரைவரை தாக்கி வழிப்பறி : 3பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 20, அக்டோபர் 2025 9:24:20 AM (IST)
தூத்துக்குடியில் லாரி டிரைவரை அரிவாளால் வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்த 3 போ் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தூத்துக்குடியில் உள்ள தனியாா் லாரி போக்குவரத்து நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். சம்பவத்தன்று இவா் லாரியில் இந்திய உணவுக் கழக கிடங்கு அருகே வந்தபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த 3 மா்ம நபா்கள், லாரியை வழிமறித்துள்ளனர்.
மேலும் அவரை அரிவாளால் தாக்கிவிட்டு, அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரூ. 4,500 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனராம். காயமடைந்த கமலக்கண்ணன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்த புகாரின்பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)










