» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் பலி!

ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:16:49 AM (IST)

கயத்தாறு அருகே லோடு ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு, அரசன் குளம் கீழ்த் தெருவைச் சேர்ந்தவர் ராமர் மகன் முருகன் (45), லோடு ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வந்தார். நேற்று இரவு 10 மணியளவில் வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் சாமான்களை இறக்கி விட்டு நான்குவழிச் சாலையில் திரும்பி  வந்து கொண்டிருந்தார். அப்போது, குமரி மாவட்டம் பூதப்பாண்டியைச் குமாரசாமி மகன் சுப்ரமணியன் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக ஆட்டோவின் பின்னால் மோதியயது. 

இவ்விபத்தில் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் முருகனை 108 ஆம்புலன்ஸில் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் சுதாதேவி வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த சுப்ரமணியனிடம் விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory