» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் பலி!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:16:49 AM (IST)
கயத்தாறு அருகே லோடு ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு, அரசன் குளம் கீழ்த் தெருவைச் சேர்ந்தவர் ராமர் மகன் முருகன் (45), லோடு ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வந்தார். நேற்று இரவு 10 மணியளவில் வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் சாமான்களை இறக்கி விட்டு நான்குவழிச் சாலையில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, குமரி மாவட்டம் பூதப்பாண்டியைச் குமாரசாமி மகன் சுப்ரமணியன் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக ஆட்டோவின் பின்னால் மோதியயது.
இவ்விபத்தில் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் முருகனை 108 ஆம்புலன்ஸில் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் சுதாதேவி வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த சுப்ரமணியனிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)










