» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்களில் தங்க நகைகள், உண்டியல் பணம் திருட்டு: வாலிபர் கைது

ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:10:24 AM (IST)

கோவில்பட்டி அருகே கோவில்களில் பூட்டை உடைத்து தங்க நகைகள், உண்டியல் பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள குருமலை கிராமத்தில் அலங்காரி அம்மன் கோயில், சுடலை மாடசுவாமி கோயில் அடுத்தடுத்து உள்ளன. இந்த இரு கோயில்களிலும் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் பூட்டை உடைந்து அம்மன், சுவாமிகள் கழுத்தில் அணிந்திருந்த தங்கப் பொட்டு தாலி மற்றும் உண்டியல்களை உடைத்து அதிலிருந்து பணம் ஆகியவற்றையும் திருடிச்சென்றனர்.

இதுகுறித்து பூசாரிகள் கருப்பசாமி, சுப்பையா ஆகியோர் அளித்த புகாரின்பேரில், கொப்பம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்த துரை மகன் சுரேஷ் (25) என்பவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory