» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புகையிலைப் பொருள்கள் கடத்திய 4 பேர் கைது : கார், பைக் பறிமுதல்

ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:00:47 AM (IST)

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த 4பேரை போலீசார் கைது செய்து, கார், பைக்கை பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அத்தைகொண்டான் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மேற்கு காவல் நிலையத்திற்கு வந்த தகவலையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதி அணுகு சாலையில் நம்பர் பிளேட் இல்லாமல் சென்ற காரையும், அதன் பின்னால் வந்த பைக்கையும் நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், கார் ஓட்டுநர் கோவில்பட்டி காந்தி நகர் ஜீவா தெருவைச் சேர்ந்த லட்சுமண பாண்டியன் மகன் குரு ராமச்சந்திரன் (28), காரில் இருந்தவர்கள், வானரமுட்டி நடுத்தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் மாரிமுத்து (44), விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வடகரை தாயனூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிராஜிதின் மகன் தம்முல் அன்சாரி (27), பைக் ஓட்டுநர் கோவில்பட்டி நடராஜபுரம் 9ஆவது தெருவைச் சேர்ந்த காளிராஜ் மகன் லட்சுமணன்(19) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, 4 பேரையும் கைது செய்து, சுமார் ரூ.90 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருள்கள், அவற்றை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கார், பைக்கையும் பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory