» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு

சனி 18, அக்டோபர் 2025 12:22:21 PM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி மோதிய விபத்தில் மற்றொரு லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.  

தூத்துக்குடி அருகேயுள்ள நடுகூட்டுடன்காடு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் வெள்ளத்துரை (49), லாரி டிரைவர். இவர் புதிய துறைமுகத்தின் 8வது கப்பல் தளத்தில் லாரியில் இருந்து சரக்கு இறக்கி கொணடிருந்த போது லாரியின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு லாரி அவர் மீது மோதியது. 

இதில் பலத்த காயம் அடைந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார. இதுகுறித்து தெர்மல் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்குப் பதிந்து லாரி டிரைவர் ஆலந்தா கிராமம் நடுத் தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் மகராஜன் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory