» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண நிதி ரூ.6.37 கோடி விடுவிப்பு - ஆட்சியர் தகவல்!

சனி 18, அக்டோபர் 2025 12:01:52 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக்காலம் தொடங்கும் முன்பே உப்பளத் தொழிலாளர்களின் மழைக்கால நிவாரண உதவித்தொகை ரூ.6,37,40,000 அரசால் விடுவிக்கப்பட்டு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.

தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உப்பளத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரண நிதியாக தலா ரூ.5000/-வழங்கும் திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்டது. 

ஆதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான உப்பளத் தொழிலாளர்களின் மழைக்கால நிவாரண உதவித்தொகை 16,562 குடும்பங்களுக்கு தலா ரூ.5000/- வீதம் மொத்தம் ரூ.8,28,10,000/- வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆணையிடப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இவ்வாண்டுக்கான உப்பளத் தொழிலாளர்களின் மழைக்கால நிவாரண உதவித் தொகை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களின் வேண்டுகோளின்படி தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா 5000 வீதம் மழைக்கால நிவாரண நிதி ரூ.6,37,40,000/- மழைக்காலம் தொடங்கும் முன்பே அரசால் விடுவிக்கப்பட்டு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக அக்.17ம் தேதி செலுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory