» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் 3 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்றனர்!

சனி 18, அக்டோபர் 2025 11:05:58 AM (IST)

தூத்துக்குடியில் வானிலை எச்சரிக்கை காரணமாக கடலுக்கு செல்லாத நிலையில்  இன்று 3 நாட்களுக்கு பின்னர் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். 

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப் படகுகளில் சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இதனிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது. 

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் அக்.17ஆம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று 3 நாட்களுக்கு பின்னர் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். சுழற்சி முறையில் 117 விசைப்படகுகளில் மீனவர்கள் இன்று காலை கடலுக்கு சென்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory