» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் 3 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்றனர்!
சனி 18, அக்டோபர் 2025 11:05:58 AM (IST)
தூத்துக்குடியில் வானிலை எச்சரிக்கை காரணமாக கடலுக்கு செல்லாத நிலையில் இன்று 3 நாட்களுக்கு பின்னர் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப் படகுகளில் சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இதனிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது.
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் அக்.17ஆம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று 3 நாட்களுக்கு பின்னர் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். சுழற்சி முறையில் 117 விசைப்படகுகளில் மீனவர்கள் இன்று காலை கடலுக்கு சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










