» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அ.தி.மு.க. 54வது ஆண்டு துவக்க விழா

சனி 18, அக்டோபர் 2025 10:57:25 AM (IST)


தூத்துக்குடியில் அ.தி.மு.க.வின் 54வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

தூத்துக்குடியில்  அ.இ.அ.தி.மு.க.வின் 54-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி மாநில வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அமைப்புச் செயலாளரும்,  மாவட்ட முன்னாள் ஊராட்சி குழுத்தலைவர் என்.சின்னத்துரை முன்னிலையில் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருவுருவ படங்களுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 
இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் யூ.எஸ்.சேகர். மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜோதிமணி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவாபாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், முன்னாள் நகர் மன்ற தலைவர் விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் மனோஜ்குமார், மாவட்ட  மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் நாகூர் பிச்சை, டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், மகளிர் அணி துணை செயலாளர்கள், ஏ.ராதா ஆனந்த் சண்முகத்தாய் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory