» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் திருடிய மெக்கானிக் கைது: 2 பைக்குகள் பறிமுதல்!

சனி 18, அக்டோபர் 2025 9:10:05 AM (IST)

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மட்டக்கடை சேதுராஜா தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (40). இவர் மணிநகர் 3-வது தெருவில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றாராம். சிறிது நேரம் கழித்து வந்த போது மர்மநபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

விசாரணையில், தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த ஆத்திக்கண்ணன் (45) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடி இருப்பது தெரியவந்தது. இவர் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக உள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory