» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் விபத்தில் விபத்தில் கட்டிட தொழிலாளி பலி!
சனி 18, அக்டோபர் 2025 9:07:50 AM (IST)
தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை ஜி.எச். தெருவை சேர்ந்தவர் காசி (42). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடிக்கு வந்து கொண்டு இருந்தாராம். இவர் செர்வைட் பள்ளிக்கூடத்துக்கு எதிரே வந்த போது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தாராம்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










