» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் விபத்தில் விபத்தில் கட்டிட தொழிலாளி பலி!

சனி 18, அக்டோபர் 2025 9:07:50 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை ஜி.எச். தெருவை சேர்ந்தவர் காசி (42). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடிக்கு வந்து கொண்டு இருந்தாராம். இவர் செர்வைட் பள்ளிக்கூடத்துக்கு எதிரே வந்த போது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தாராம். 

இதில் பலத்த காயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory