» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் காயம்; போக்குவரத்து பாதிப்பு!

செவ்வாய் 12, ஆகஸ்ட் 2025 4:17:52 PM (IST)



தூத்துக்குடியில் துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில் தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், டிரைவர் படுகாயம் அடைந்தார்.   

தூத்துக்குடி முத்தையாபுரம் எம்.சவேரியாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் முத்துக்குமார் (35) தண்ணீர் லாரி டிரைவர். இவர் புதுக்கோட்டையில் இருந்து லாரியில் தண்ணீருடன் முத்தையாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருச்செந்தூர் ரோடு, உப்பாற்று ஓடை அருகே லாரியை திருப்ப முயன்றபோது நாய் ஒன்று குறுக்கே பாய்ந்துள்ளது.

இதனால் தண்ணீர் லாரி கட்டுப்பாட்டை இழ்நது நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் முத்துக்குமார் பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே லாரி கவிழ்ந்ததால் தூத்துக்குடி துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory