» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் திட்டம்: ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
சனி 9, ஆகஸ்ட் 2025 11:36:04 AM (IST)

தூத்துக்குடியில், அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்திய நாட்டின் தலை சிறந்த கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி சென்னை கல்வி நிறுவனத்தின் அனைவருக்கும் ஐ.ஐ.டி மெட்ராஸ் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பள்ளி கல்வித்துறை உயர் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அனைவருக்கும் ஐ.ஐ.டி மெட்ராஸ் திட்டத் தலைவரும், ஐ.ஐ.டி மெட்ராஸ் சமூக முன்னெடுப்புகள் தலைவர் ஹரி கிருஷ்ணன் கலந்து கொண்டு இத்திட்டம் குறித்து விளக்கினார்.
இந்த திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ நுழைவு தேர்வு இல்லாமல் ஐ.ஐ.டி இல் உருவாக்கப்பட்டுள்ள இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு படிப்பது குறித்தும், ஐ.ஐ.டி சென்னை மூலம் வழங்கப்படும் AI சான்றிதழ் படிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 12ம் வகுப்புக்குப் பிறகே அல்லாமல், 11ம் வகுப்பு முடிந்ததும் இத்திட்டத்தில் சேரமுடியும்.
இதற்கு வயது வரம்பும் இல்லை. பதிவுசெய்யும் மாணவர்கள், ஐ.ஐ.டி மெட்ராஸ் வழங்கும் 4 வார ஆன்லைன் பயிற்சியை பூர்த்தி செய்து, தேர்வில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெறுபவர்கள் Data Science மற்றும் Electronic Systems ஆகிய தொழில்நுட்ப துறைகளில் B.S பட்டப்படிப்பை தொடங்கலாம்.
மற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும், வேலை பார்க்கும் நபர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தகவலுக்கு study.iitm.ac.in/ds மற்றும் study.iitm.ac.in/es என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், 350 க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் இந்த வாய்ப்பை பயணப்படுத்தி ஐ.ஐ.டி சென்னையில் மேற்படிப்பு பயில்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில் பள்ளி கல்வி துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)










