» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கொத்தனார் கைது!
சனி 9, ஆகஸ்ட் 2025 10:53:03 AM (IST)
தூத்துக்குடியில் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ய முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர், ஜேசு நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் நட்டார் (55), கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்தம்மாள் (45), இந்த தம்பதியருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். நட்டார் தினசரி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்வாராம்.
இதுபோல் நேற்று இரவு குடி போதையில் வந்த அவர் மனைவி முத்தம்மாளிடம் தகராறு செய்து அவரை இரும்பு கம்பியால் தலையில் சரமாரியாக தாக்கினாராம். இதில் பலத்த காயம் அடைந்த முத்தம்மாள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நட்டாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது
திங்கள் 8, டிசம்பர் 2025 8:35:30 PM (IST)

ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வான 13 பேருக்கு பணி நியமன ஆணை : எஸ்பி வழங்கினார்
திங்கள் 8, டிசம்பர் 2025 8:23:33 PM (IST)

காமராஜரை இழிவுபடுத்திய யூடியூபரை கண்டித்து நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
திங்கள் 8, டிசம்பர் 2025 7:56:03 PM (IST)

கோவில் நிலத்தை அபகரிக்க முயல்வதாக புகார் : செயல் அலுவலர் தர்ரணா போராட்டம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 4:46:58 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்புப் பயிற்சி துவக்கம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 4:36:34 PM (IST)

பனை ஓலை வெட்ட முயன்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 4:23:58 PM (IST)










