» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கொத்தனார் கைது!

சனி 9, ஆகஸ்ட் 2025 10:53:03 AM (IST)

தூத்துக்குடியில் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ய முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி தாளமுத்து நகர், ஜேசு நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் நட்டார் (55), கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்தம்மாள் (45), இந்த தம்பதியருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். நட்டார் தினசரி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்வாராம்.

இதுபோல் நேற்று இரவு குடி போதையில் வந்த அவர் மனைவி முத்தம்மாளிடம் தகராறு செய்து அவரை இரும்பு கம்பியால் தலையில் சரமாரியாக தாக்கினாராம். இதில் பலத்த காயம் அடைந்த முத்தம்மாள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நட்டாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory