» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வடிகாலில் மணல் திட்டுகள் அகற்றும் பணி : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 12:34:17 PM (IST)



தூத்துக்குடி மில்லர்புரம் இரட்டை பாலம் அருகில் வடிகாலில் மணல் திட்டுகள் அகற்றும் பணி தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களைப் போல மழை நீர் மாநகரப் பகுதிகளில் தேங்காமல் இருக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக மில்லர்புரம் இரட்டை பாலம் அருகில் உள்ள வடிகாலில் மணல் திட்டுகள் தடையாக இருப்பதாக வந்த பொதுமக்களின் கோரிக்கையிணைத் தொடர்ந்து அந்தப் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தேன் என்று தெரிவித்தார். 

ஆய்வின் போது, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

ஏரியா காரன்Aug 8, 2025 - 02:01:23 PM | Posted IP 162.1*****

ஒழுங்கா வார வாரம் சுத்தப்படுத்தி இருந்தால், கடைசியில் இப்படி கஷ்டப்பட வேண்டியிருக்காது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory