» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல் நிலையத்தில் பெண் தற்கொலை முயற்சி : தூத்துக்குடியில் பரபரப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 8:09:20 AM (IST)
தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த பெண், அங்குள்ள கழிவறை ஜன்னலில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பாக்யராஜ் மனைவி மீனா (36). குடும்ப பிரச்னையால் கணவரை பிரிந்து வாழ்கிறாராம். மேலும், இவர் வேலை செய்து வரும் திரேஸ்புரம் பகுதியில் உள்ள வீட்டில் 2 பவுன் தங்க மோதிரங்கள் திருடு போயினவாம். வீட்டின் பெண் உரிமையாளர், இவர் மீது சந்தேகப்பட்டு, வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும், மீனாவை ஆட்டோவில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் நேற்று ஒப்படைத்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், கழிவறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த போலீசார், அங்கு சென்று பார்த்தபோது அவர் லெக்கின்ஸை கழிவறை ஜன்னலில் கட்டி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. போலீசார் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










