» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.75 லட்சம் மருந்து பொருட்கள் பறிமுதல் : ஒருவர் கைது

சனி 12, ஜூலை 2025 8:34:54 PM (IST)



காயல்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.75லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்களை கன்டெய்னர் லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஓடக்கரை கடற்கரையில் பகுதியில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது வேகமாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, லாரியில் இருந்து 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.

அந்த லாரியில் 35 கிலோ வீதம் 54 மூடைகளில் சுக்கு, 65 பெட்டிகளில் மருந்து மாத்திரைகள் இருந்தது. இவை அனைத்தும் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும். அந்த லாரியை ஓட்டி வந்த மூலக்கரை பட்டியை சேர்ந்த தங்கபாண்டி மகன் முத்துக்குமார் (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory