» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.75 லட்சம் மருந்து பொருட்கள் பறிமுதல் : ஒருவர் கைது
சனி 12, ஜூலை 2025 8:34:54 PM (IST)

காயல்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.75லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்களை கன்டெய்னர் லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஓடக்கரை கடற்கரையில் பகுதியில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது வேகமாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, லாரியில் இருந்து 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.
அந்த லாரியில் 35 கிலோ வீதம் 54 மூடைகளில் சுக்கு, 65 பெட்டிகளில் மருந்து மாத்திரைகள் இருந்தது. இவை அனைத்தும் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும். அந்த லாரியை ஓட்டி வந்த மூலக்கரை பட்டியை சேர்ந்த தங்கபாண்டி மகன் முத்துக்குமார் (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










