» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் டாஸ்மாக் பாரில் வாளுடன் ரவுடிகள் ரகளை : போலீசார் விசாரணை

சனி 12, ஜூலை 2025 8:15:02 PM (IST)

தூத்துக்குடியில் டாஸ்மாக் பாரில்  ரவுடிகள் இருவர் வாளுடன் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தூத்துக்குடி சுப்பையாபுரம் 2வது தெருவில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் இன்று பிற்பகல் ரவுடிகள் இருவர் வாளுடன் உள்ளே நுழைந்து அங்கு மது அருந்திக் கொண்டிருந்த நபர்களுடன்  தகராறில்   ஈடுபட்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து பார் ஊழியர்கள் கடையடைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டனர். சம்பவம் தொடர்பாக மதுபான கூட உரிமையாளர் தென்பாகம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்

இதை தொடர்ந்து போலீசார் வாளுடன் ரகளையில் ஈடுபட்ட அண்ணாமலை என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் ஏற்கனவே அதே மதுபான கூடத்தில் இரவில் மது குடித்துக் கொண்டிருந்த ஒரு நபரை பணம் கேட்டு மிரட்டி பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மீண்டும் அவர் மற்றொரு ரவுடியுடன் சேர்ந்து பாரில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory