» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளைஞர் மர்ம மரணம்: எஸ்.பி.யிடம் உறவினர்கள் புகார்!!

சனி 12, ஜூலை 2025 7:34:44 AM (IST)

தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி, மறவன்மடம் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (35). இவருக்கு, அதிக மதுப் பழக்கம் இருந்ததால் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள மது போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மைய ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால், அங்கு விக்னேஷ் உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனைக்குப் பின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள், அவரது கை உள்ளிட்ட பகுதிகளில் காயம், கயிற்றால் கட்டிய தழும்புகள் இருந்தனவாம். எனினும் உடலை அடக்கம் செய்த உறவினர்கள், அவரது இறப்பில் மர்மம் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை கோரியும் அவரது மனைவி பிரேமலதாவுடன் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேற்று மனு அளித்தனர். மேலும், 2 குழந்தைகள் குழந்தைகள் உள்ள நிலையில், அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory