» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இளைஞர் மர்ம மரணம்: எஸ்.பி.யிடம் உறவினர்கள் புகார்!!
சனி 12, ஜூலை 2025 7:34:44 AM (IST)
தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி, மறவன்மடம் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (35). இவருக்கு, அதிக மதுப் பழக்கம் இருந்ததால் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள மது போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மைய ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால், அங்கு விக்னேஷ் உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனைக்குப் பின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள், அவரது கை உள்ளிட்ட பகுதிகளில் காயம், கயிற்றால் கட்டிய தழும்புகள் இருந்தனவாம். எனினும் உடலை அடக்கம் செய்த உறவினர்கள், அவரது இறப்பில் மர்மம் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை கோரியும் அவரது மனைவி பிரேமலதாவுடன் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேற்று மனு அளித்தனர். மேலும், 2 குழந்தைகள் குழந்தைகள் உள்ள நிலையில், அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










