» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் மீனவர் பலி!

வியாழன் 10, ஜூலை 2025 10:40:09 AM (IST)

தூத்துக்குடியில் கார் மீது பைக் மோதிய விபத்தில் மீனவர் பரிதாபமாக இறந்தார்.
 
தூத்துக்குடி திரேஸ்புரம் அண்ணா காலனியைச் சேர்ந்தவர் தர்மபுத்திரன் மகன் ரொமிஸ்டன் (30). இவர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை ஏலம் விடும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு 9 மணியளவில் மீன்பிடி துறைமுகம் செல்வதற்காக பீச் ரோட்டில் பைக்கில் சென்று கொண்ருந்தார். 

சப் கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது, முன்னால் சென்ற கார் மீது அவரது பைக் மோதியது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இந்த சம்பவம் குறித்து மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory