» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாய்களுக்கு ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி முகாம் : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்

புதன் 9, ஜூலை 2025 3:39:11 PM (IST)



தூத்துக்குடியில் நாய்களுக்கு ரேபிஸ் வெறி நாய் தடுப்பூசி போடும் முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நாய்களுக்கு ரேபிஸ் வெறிநாய் தடுப்பூசி போடும் முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். 

பின்னர் அவர் தெரிவிக்கையில்,"மாநகர மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசிகள் போட வேண்டுமென்றால் மாநகராட்சியின் கட்டணமில்லாத இந்த 18002030401 எண்ணை தொடர்பு கொண்டால் உங்கள் அருகிலுள்ள மாநகராட்சி பூங்காக்கள் மாநகர மக்கள் கூடும் இடங்கள் ஆகிய பகுதிகளிலும் தெருக்களுக்களிலும் நேரடியாக வந்து ஊசிகள் போடப்படும் என்று தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் சஞ்சீவி ராஜ், மாநகர் நல அலுவலர் சரோஜா, திமுக பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி சபா உறுப்பினர் ஆர்தர் மச்சாது உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory