» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா : நலதிட்ட உதவிகள் வழங்கல்!!
செவ்வாய் 8, ஜூலை 2025 8:21:27 PM (IST)

சாயர்புரம் செபத்தையாபுரம் அரிமா சங்கத்தின் 2025 - 2026 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தூத்துக்குடி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் எஸ்விபிஎஸ் மஹாலில் நடந்தது
விழாவிற்கு சங்கத் தலைவர் கோதண்டராமன் தலைமை வகித்தார். முன்னாள் கவர்னர் டாக்டர் ஷாஜஹான் அமைச்சரவை அலுவலர்கள் வனமூர்த்தி, ராஜேஷ், சுப்பையா, ஆறுமுகசாமி, ஶ்ரீனிவாசன் ஆலயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்தரசன் கொடி வணக்கம் வாசித்தார். நல்லாசிரியர் ஞானராஜ் அரிமா சங்க வழிபாட்டை நடத்தினார். உலக அமைதிக்காக ஒரு நிமிட மௌனம் அனுசரிக்கப்பட்டது.
அரிமா சங்க செயலாளர் செல்வ பிரகாஷ் வருடாந்திர சேவைத்திட்ட அறிக்கை அளித்தார். விழாவில் சாயர்புரம் செபத்தையாபுரம் அரிமா சங்கதலைவராக எஸ்.வி.பி.எஸ். பண்டாரம், செயலாளராக விஜய சிவா, பொருளாளராக பாஸ்கர் உள்பட அனைத்து புதிய நிர்வாகிகளுக்கு முன்னாள் கவர்னர் விஸ்வநாதன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். செபத்தையாபுரம் சக்திவேல் சேர்வைக்காரன்மடம் பிளெஸ்ஸிங் சாமுலேல் ஆகியோர் புதிய உறுப்பினர்களாக சங்கத்தில் இணைத்துக் கொண்டனர்.
விழாவில் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளி, தூய மேரி மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிவத்தையாபுரம் அருள்மிகு முத்து மாலையம்மன் இந்து மேல்நிலைப் பள்ளிகளில் 10வது மற்றும் 12வது வகுப்பு அரசுத் தேர்வுகளில் முதல் இரு மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியரை கௌரவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் 20 பேருக்கு கல்வி உதவித் தொகையும் சாயர்புரம் இம்மானுவேல் டிரஸ்ட் குழந்தைகள் நல மையத்திற்கு நிதியுதவி, சலவை தொழிலாளிக்கு இஸ்திரி பெட்டி உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அரிமா சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










