» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு: தூய்மை பாரத ஓட்டுநர் பணியாளர் நலச்சங்கம் அறிவிப்பு!

செவ்வாய் 8, ஜூலை 2025 8:04:55 PM (IST)

நாளை நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் தூத்துக்குடி தூய்மை பாரத ஓட்டுநர் மற்றும் பணியாளர் நலச்சங்கம் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாநகராட்சியில், தொழிற்சங்க விரோதம் கொண்டு தொழிலாளர்களை மண்டலம் மாறுதல் உத்தரவை தொழிலாளர் இணை ஆணையரின் அறிவுறுத்தலில் ஏற்றுக் கொண்ட வாரு முன்பு வேலை பார்த்த அதே மண்டலத்தில் பணி அமர்த்த வேண்டும். தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் மாவட்ட ஆட்சியர் 2024-இல் அறிவித்த ஊதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தொழிலாளர்களின் கூலியை சுரண்டும் ஒடுக்குமுறை செய்யும் சட்ட விரோதமாக செயல்படும் அவர்லாந்து ஒப்பந்த நிறுவனத்தை ரத்து செய்ய வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஜூலை 9) புதன்கிழமை காலை 6:00 மணி முதல் மாநகராட்சியில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என்று தூய்மை பாரத ஓட்டுநர் மற்றும் பணியாளர் நலச்சங்கம் அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory