» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புனித மலையப்பர் ஆலய திருவிழா சப்பரபவனி : திரளான பக்தர்கள் பங்கேற்பு

திங்கள் 7, ஜூலை 2025 8:20:32 PM (IST)



பேய்க்குளம் புனித மலையப்பர் என்ற தோமையார் ஆலய திருவிழாவில் சப்பரபவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் தோமையார்புரம் புனித மலையப்பர் என்ற தோமையார் ஆலய திருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கியது. இத் திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. தினமும் திருப்பலி மறையுறை ஜெபமாலை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

9ம் நாளான ஜூலை 5ஆம் தேதி காலை சவேரியார் புரம் பங்குதந்தை பிராக்ரஸ் தலைமையில் ஜெபமாலை, புனிதரின் பிரார்த்தனை, திருப்பலியும், மாலை சாத்தான்குளம் மேரி இமாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி அருள் தந்தை ரூபட் தலைமையில் திருவிழா சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. தென்மண்டல பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஜோசப் ஸ்டாலின் மறையுறை வழங்கினார். தொடர்ந்து புனிதரின் சப்பர பவனி நடந்தது. 

10ம் நாளான 6ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை தென் மண்டல பொறுப்பருள் தந்தை வெனி இளங் குமரன் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி, ஜெபமாலை புனிதரின் பிரார்த்தனை நடைபெற்றது. அருள் தந்தை பெப்பி மறையுறை வழங்கினார். தொடர்ந்து புனிதரின் சப்பர பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை கொடி யிறக்கம், நற்கருணை ஆசீர், மற்றும் பங்குத்தந்தை சந்திப்பு நன்றி நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிராக்ரஸ் தலைமையில் அருட்சகோதரிகள், இறைமக்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory