» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிவஞானபுரம் கிராமத்தில் சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை : ஆட்சியருக்கு கோரிக்கை

திங்கள் 7, ஜூலை 2025 7:45:32 PM (IST)

சேர்வைக்காரன்மடம் ஊராட்சி சிவஞானபுரம் கிராமத்தில் சீரான குடிநீர் கிடைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி சிவஞான புரம் கிராமத்தில் ஊராட்சியால் வழங்கப்படும் தண்ணீர் வழங்கபடவில்லை. சுமார் நான்கு நாட்களாக பொதுமக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். இந்த பகுதிக்கு அமைக்கப்பட்டுள்ள நீரேற்றும் நிலையத்திற்கு மின்சாரமானது புதுக்கோட்டை மின் பகிர்மானத்தில் உள்ளது.

மேற்கண்ட குடிநீர் ஏற்றும் நிலையத்திற்கு அளிக்கப்படும் மின்சார வழித்தடத்தில் உள்ள மின் வயர்கள் தொய்ந்து போய் காற்றினால் ஒன்றோடொன்று உராய்ந்து அடிக்கடி இந்த குடிநீர் ஏற்றும் நிலையத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. கடந்த நான்கு நாள்களாக மேற்கண்ட பிரச்சனை உள்ளதால் நீரேற்றும் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி ல்லாமல் சுமார் 4 நாட்களாக ஊராட்சி மக்களுக்கு தண்ணீர் வழங்கபடவில்லை.

மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்கண்ட மின் வயர்களை சரி செய்து சுமார் 4 நாட்களாக தண்ணீர் வராமல் உள்ள சிவஞானபுரம் ஊர் மக்களுக்கு குடி தண்ணீர் வழங்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேர்வைக்காரன்மடம் ஊராட்சி முன்னாள் உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory