» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

திங்கள் 7, ஜூலை 2025 5:26:58 PM (IST)



விளாத்திகுளத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் கடந்த 2024-2025 கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மோனிகா, யாழினி சோபியா, பவித்ரா, 12-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பிரதீபா, அரிகரன், முத்துமனிஷா ஆகியோருக்கு தேவேந்திர குல வேளாளர் நல சங்கம் சார்பாக பரிசுத்தொகையாக ரூ.15,000, ரூ.12,000 மற்றும் ரூ.10,000 வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில், சென்னை ரிசர்வ் வங்கி உதவிப் பொது மேலாளர் அன்பரசு, விளாத்திகுளம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனிய சக்தி ராமச்சந்திரன், தொழிலதிபர் ரஞ்சித் குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குருநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாக்கண்ணு மற்றும் கற்பகம் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory