» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பாஜக அலுவலகத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!

திங்கள் 7, ஜூலை 2025 3:33:46 PM (IST)

தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் முறைகேடாக பெறப்பட்ட குடிநீர் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர். 

தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோட்டில் மச்சாது நகர் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தெற்கு மாவட்ட அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் கட்டி சுமார் மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்று காலை வாட்டர் சப்ளை ஆய்வாளர் குமார் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்து அங்கு முறைகேடாக குடிநீர் இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது என்று கூறி அந்த இணைப்பை துண்டித்துள்ளார். 

பாரதிய ஜனதா கட்சி அலுவலக கட்டிடத்திற்கு இதுவரை அனுமதி பெறவில்லை என்றும், அரசாங்கத்திற்கு கட்டிட வரி எதுவும் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக மாநகராட்சி துணை ஆணையர் சுரேஷ் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory