» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பாஜக அலுவலகத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!
திங்கள் 7, ஜூலை 2025 3:33:46 PM (IST)
தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் முறைகேடாக பெறப்பட்ட குடிநீர் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.
தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோட்டில் மச்சாது நகர் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தெற்கு மாவட்ட அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் கட்டி சுமார் மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்று காலை வாட்டர் சப்ளை ஆய்வாளர் குமார் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்து அங்கு முறைகேடாக குடிநீர் இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது என்று கூறி அந்த இணைப்பை துண்டித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி அலுவலக கட்டிடத்திற்கு இதுவரை அனுமதி பெறவில்லை என்றும், அரசாங்கத்திற்கு கட்டிட வரி எதுவும் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக மாநகராட்சி துணை ஆணையர் சுரேஷ் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










