» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அழகுநிலையம் உட்பட 2 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை

ஞாயிறு 6, ஜூலை 2025 11:03:22 AM (IST)

தூத்துக்குடியில் அழகுநிலையம் உட்பட 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தூத்துக்குடி முள்ளக்காடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்துரை (56). இவர் முத்தையாபுரம் தோப்பு தெரு பகுதியில் பெயிண்டு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை வழக்கம்போல் அடைத்து விட்டு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ரூ.7 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

அதுபோல் முத்தையாபுரம் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த சிலம்பு ஒளி (42). இவரும் அதே பகுதியில் அழகு நிலையம் வைத்துள்ளார். அவருடைய கடையின் பூட்டையும் மர்ம நபர்கள் உடைத்து அங்கிருந்த ரூ.6 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து 2 பேரும் தனித்தனியாக முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory