» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தோட்டத்தில் புகுந்து நாய்கள் கடித்து குதறியதில் 25 ஆடுகள் பலி

சனி 5, ஜூலை 2025 8:19:23 PM (IST)



சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் புகுந்து நாய்கள் கூட்டம் கடித்து குதறியதில் 25 ஆடுகள் உயிரிழந்தன. 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள தஞ்சைநகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி மகன் சாமுவேல்(36). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் முள்வேலி அமைத்து 25க்கும் மேற்பட்ட ஆடுகளை பராமரித்து வருகிறார். ஆடுகளுக்கு இரவு இரை வைத்து விட்டு மறுநாள் காலையில் தோட்டத்திற்கு வருவது வழக்கம். அதுபோல் இன்று காலை பனையேறும் தொழிலாளி, தோட்டத்திற்கு சென்றபோது தோட்டத்தில் இருந்து நாய்கள் குரைத்தபடி வெளியேறின. 

உள்ளே சென்று பார்த்தபோது தோட்டத்தில் 25 ஆடுகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இரவில் நாய்கள் கூட்டம் தோட்டத்தில் புகுந்து ஆடுகளை குதறியதில் செத்து மடிந்து இருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ஸ்ரீதர், விஏஓ ஜாஸ்மின் மேரி, கால்நடை மருத்துவர் சவுந்தர், வனத்துறை அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் சம்பவம் சென்று விசாரணை நடத்தினர். நாய்கள் தாக்கி 25 ஆடுகள் இறந்து விட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என சாமுவேல், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory